Sunday 21 February 2010

நிரந்தர அடிமைகள்..

எங்களுக்கு திருமணம் அன்று...
திருமரணமும் நடக்கிறதே... !

சிசுவாக இருந்த போது...
குடித்த முலைப்பாலுக்கு...
விலைகொடுக்கிறான் வந்தவன்.... !

என்னைப்பெற்றவனோ...
ஊரைக்கூட்டி வந்தவனுக்கு...
பொன்னும், பொருளையும்...
தட்சணையாக கொடுத்து...!

அவன் கையில்...
எங்கள் கைகளை வைத்து...
பெற்றவள் எள்ளுத்தண்ணீர் விட்டு...
எங்களை தாரை வார்க்கிறாள்...
ஈவு ஈரக்கமில்லாமல்...!

இனி நாங்கள்...
வந்தவனுக்கு அடிமைகள்...!
ஆயுள் கைதிகள்....
நிரந்தர அடிமைகள்...!

இதுதான் பெண்களுக்கு...
சமூதாயம் கொடுக்கும்...
கௌரவ அங்கீகாரம்...!

தமிழச்சி (tamizachi.com)
28.10.2009

No comments:

Post a Comment